பாடல் – 1
படம்: அவள் அப்படித்தான்
இசை:
பாடலாசிரியர்:
பாடகர்கள்:
உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடங்கலாம்..
இனியெல்லாம் சுகமே..
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்..
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்..
வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே .. புது அழகிலே நாமும் இணையலாம்..
வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்..
நீ கண்டதோ துன்பம், இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது..
--------------------------------------------------------------------
பாடல் – 2
படம்:
இசை:
பாடலாசிரியர்:
பாடகர்கள்: SPB
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
தேசிய விருதுகள் வாங்கலாம், உன் தேகத்தை கட்டிவை..
ஆசிய விருதுகள் வாங்கலாம், சில ஆணைகள் இட்டுவை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
மூச்சு நின்றாலும் முயற்சி நில்லாது..
காற்று ஓய்ந்தாலும் கால்கள் ஓயாது..
ஓடிப்பாராமல் தூரம் கழியாது..
வேர்வை இல்லாமல் வெற்றி கிடையாது..
தேகம் வளையாமல் யாகம் முடியாது..
காணும் ஒவ்வொரு விதையிலும் ஓர் மரம் உள்ளே உறங்குது இல்லையா..
மூடிய பூமியை முட்டியே புல்களும் முளைக்குது இல்லையா..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
கட்டி வைத்தாலும் கங்கை நில்லாது..
வெட்டி வைத்தாலும் வாழை சாகாது..
தோல்வி இல்லாமல் வெற்றி விளங்காது..
தொடர்ந்து முன்னேறு தோல்வி கிடையாது..
பாதை தீர்ந்தாலும் பயணம் தீராது..
அன்று போருக்குள் புதைந்திட்ட ஜப்பானில் பூக்கள் பூத்தது எப்படி?
கால்களில் ரணம் கொண்ட பெண்மானே உலகை தாண்டனும் அப்படி..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
தேசிய விருதுகள் வாங்கலாம், உன் தேகத்தை கட்டிவை..
ஆசிய விருதுகள் வாங்கலாம், சில ஆணைகள் இட்டுவை..
-------------------------------------------------------------------------------------
பாடல் - 3
படம்:
இசை:
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடகர்கள்:
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி(உள்ளம் என்பது)
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை(உள்ளம் என்பது)
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
-------------------------------------------------------------------
பாடல் - 4
படம்:
இசை:
பாடலாசிரியர்:
கண்ணதாசன் பாடகர்கள்:
ஆசையே அலைபோலே
நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே! (ஆசை)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)
Friday, September 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment